உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வாராகி அம்மன் கோயிலில் அமாவாசை யாகம்

வாராகி அம்மன் கோயிலில் அமாவாசை யாகம்

சாணார்பட்டி: -சாணார்பட்டி கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் சித்திரை மாத அமாவாசை பூஜையையொட்டி உலக நன்மை வேண்டி யாக பூஜை நடந்தது. முன்னதாக வாராகி அம்மனுக்கு திரவிய அபிஷேகங்களும், பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் தேங்காயில் தீபமேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். அமாவாசை சூழயாக வேள்வி பூஜையை வாராகி அறக்கட்டளை தலைவரும், வரசித்தி வாராகி அம்மன் கோயில் பீடாதிபதியுமான சஞ்சீவி சாமிகள் நடத்தினார். அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை