உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆஷாட நவராத்திரி விழாவில் ஊஞ்சல் உற்ஸவம்

ஆஷாட நவராத்திரி விழாவில் ஊஞ்சல் உற்ஸவம்

சாணார்பட்டி: -சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோயில் ஆஷாட நவராத்திரி விழாவில் ஊஞ்சல் உற்ஸவம், விளக்கு பூஜை , அன்னதானம் நடந்தது.வாராஹி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து ஊஞ்சல் உற்ஸவம் நடந்தது. இரவு பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடந்தது. காப்பு கட்டிய பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வரசித்தி வாராஹி அம்மன் கோயில் பீடாதிபதி சஞ்சீவி சாமிகள் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !