உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆவணி அவிட்டத்தில் பூணுால்

ஆவணி அவிட்டத்தில் பூணுால்

திண்டுக்கல் : மாவட்ட ஆயிர வைசியர் சங்கம் சார்பில் திண்டுக்கல் தரகுமண்டி குமாஸ்தாக்கள் சங்க கல்யாண மஹாலில் உள்ள விநாயகர் கோயிலில் பூணுால் அணியும் விழா நடந்தது. 300 பேர் பங்கேற்றனர். தலைவர்,நிர்வாகிகள் பங்கேற்ற அனைவரையும் வரவேற்றனர்.சின்னாளபட்டி அக்கசாலை சித்தி விநாயகர் கோயிலில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு சுவாமிக்கு திரவிய அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பூணுால் அணிந்து வழிபாடு செய்தனர்.சவடம்மன் கோயில், பாதாள பேச்சியம்மன் கோயில், செக்காபட்டி உள்ளிட்ட இடங்களில் ஆவணி அவிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. பழநி: பழநி அர்ச்சகர் ஸ்தானிக சங்கத்தின் சார்பில் தெற்கு ரத வீதியில் உள்ள சங்க கட்டடத்திலும், தெற்கு ரதவீத வீதி வாசவி மஹாலில் ஆரிய வைசிய சமஜத்தின் சார்பிலும் , பழநி அ.கலையம்புத்துார் அக்ரஹாரம் பகுதியிலும் பூணுால் மாற்றும் வைபவம் நடைபெற்றது.நத்தம்: விஸ்வகர்மா தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆவணி அவிட்ட பூணுால் அணியும் விழா நடந்தது. எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள விநாயகர் கோயிலில் ஏராளமானோர் ஒன்றுகூடி வைதீக முறைப்படி பூணுால் அணிந்து கொண்டனர். காயத்ரி மந்திரங்கள் படிக்க வழிபாடு நடத்தப்பட்டது. ஏற்பாடுகளை விஸ்வகர்மா தொழிலாளர்கள் சங்க தலைவர் ரவீந்திரன், செயலாளர் முருகேசன், பொருளாளர் ஆர்.முருகேசன் செய்திருந்தனர்.கோபால்பட்டி: கே.அய்யாபட்டி அய்யனார் கோயிலில் பக்தர்கள் சிறப்பு பூஜை செய்து புரோகிதர்கள் மந்திரம் சொல்ல பூணுாலை அணிந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை