உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  ஆசிரியர் தகுதி தேர்வு 514 பேர் ஆப்சென்ட்

 ஆசிரியர் தகுதி தேர்வு 514 பேர் ஆப்சென்ட்

திண்டுக்கல்: தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்த அனைவருக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தகுதி தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 490 பேர் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்தனர். 11 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. மாவட்டம் முழுவதும் மொத்தம் 2 ஆயிரத்து 976 பேர் தேர்வு எழுதினர். 514 பேர் ஆப்சென்ட் ஆகினர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு நடக்கிறது. இதனை 10 ஆயிரத்து 934 பேர் எழுதுகின்றனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 36 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ