உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பரிதவிப்பு கவனிப்பாரில்லாத பாலங்களால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்வுகளால் விபத்துக்கள் நடக்கும் அவலம்

பரிதவிப்பு கவனிப்பாரில்லாத பாலங்களால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்வுகளால் விபத்துக்கள் நடக்கும் அவலம்

வடமதுரை: திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் இருக்கும் பல பாலங்களில் முறையாக ரோடு அமைக்கப்படாததால் , கடும் அதிர்வுகளால் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விபத்துகளை சந்திக்கின்றனர்.நகரங்கள், கிராமங்களை இணைக்கும் வகையில் இருக்கும் ரோடுகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மாநில நெடுஞ்சாலை, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் சார்பில் அமைக்கப்படுகின்றன. இவற்றில் ஆங்காங்கே மழை நீர், வடிகால், பாசன வாய்க்கால் நீர் கடந்து செல்ல வசதியாக சிறுபாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இவ்வற்றில் தேசிய, மாநில நெடுஞ்சாலை அந்தஸ்து ரோடுகளில் கட்டப்படும் பாலங்களையொட்டி கப்பி கற்களை கொண்டு நிரப்பி எதிர்காலத்தில் மண் இறுக்கம் ஏற்பட்டு பள்ளமாவதை தடுக்க அக்கறை காட்டுகின்றனர். அப்படியே மண் இறுக்கம் ஏற்பட்டாலும் சில வாரங்களில் அவ்விடங்களில் தார் கலவை கொண்டு சீரமைப்பு பணி செய்கின்றனர். ஆனால் கிராமப்புற ரோடுகளில் ஒப்பந்த அடிப்படையில் ரோடு அமைத்த பின்னர் அடுத்த 5 ஆண்டுகள் கழித்து ரோடு புதுப்பித்தல் பணி நடக்கும் வரை கவனிப்பில்லாத நிலை உள்ளது. ஏராளமான இடங்களில் வேகத்தடைகளை சகட்டுமேனிக்கு அமைக்கின்றனர். வேகத்தடை இருப்பதை வாகன ஓட்டிகளுக்கு உணர்த்தும் வகையில் அடையாளம் இருப்பதில்லை. இதனால் வேகத்தடை இருப்பது தெரியாமல் வழக்கமான வேகத்தில் பயணிக்கும் டூவீலர் ஓட்டிகள் தடுமாறி விபத்தில் சிக்குகின்றனர்.இந்த கொடுமை ஒருபுறமிருக்க கிராமப்புற ரோடுகளில் புதிய பாலம் கட்டும் இடங்களில் போதுமான அளவில் மண்ணை இயந்திரங்கள் கொண்டு சமன் செய்வதில்லை. இதனால் சில வாரங்களிலே பாலத்தையொட்டிய பகுதிகளில் மண் இறுக்கம் ஏற்பட்டு பள்ளம் ஏற்படுகிறது. மேலும் பல இடங்களில் பாலம் மேடாகவும் அதை ஒட்டி ரோடு உடனடி பள்ளமாகவும் இருக்கின்றன. ஏறத்தாழ இவையும் அதிகாரபூர்வமற்ற வேகத்தடைகளாக மாறிவிடுகின்றன. இதனால் வாகனங்கள் கடக்கும்போது கடும் அதிர்வும், பேரிரைச்சலும், சில இடங்களில் தடுமாற்றம் ஏற்பட்டு விபத்துகளும் நடக்கின்றன. இவ்விடங்களில் முன்னுரிமை அடிப்படையில் சீரமைப்பு பணிகள் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்............- சத்தத்தால் பதறும் மக்கள்பாலம் கட்டும்போதே மண்ணை கொட்டி நன்றாக இறுகும் வகையில் இயந்திரங்களை பயன்படுத்தாமல் அவசர கதியில் பணியை முடிக்கின்றனர். இதனால் பாலங்களையொட்டி சில வாரங்களிலே பள்ளம் ஏற்படுகிறது. வடமதுரை சிக்காளிபட்டி ரோட்டில் இருக்கும் பாலம் மிக உயரமான வேகத்தடை போல் உள்ளதால், லாரி, டிராக்டர்கள் கடக்கும்போது பெரிய இரைச்சல் ஏற்படுகிறது. ஏதோ விபத்து ஏற்பட்டுவிட்டதோ என அப்பகுதியினர் ஒவ்வொரு சத்தத்திற்கும் பதறும் நிலை உள்ளது. இதுபோன்ற பாலங்கள் விரைவில் பலமிழக்கும். வாகனங்களுக்கும் பாதிப்புகள் ஏற்படும். பாலங்களில் விளிம்பு பகுதிகளில் தார் கலவை கொண்டு சீரான சரிவு கொண்ட வாட்டம் இருக்கும் வகையில் பராமரிக்க வேண்டும்.- வி.செந்தில்நாதன், நிர்வாகி, கோவில் தோட்டம் பேசும் பழனியாண்டவர் கோயில், அய்யலுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி