சாய்ந்த வழிகாட்டி பலகை
தாண்டிக்குடி வத்தலக்குண்டு ரோட்டில் வழிகாட்டும் பலகை சாய்ந்த நிலையில் உள்ளதால் விபத்து அபாயம்உள்ளது. இதை சீரமைக்க வேண்டும்.- -மணிகண்டன், தாண்டிக்குடி நடவடிக்கை எடுக்கப்படும்
உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.- -கண்ணன், நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் மின் சிக்கனம் வேண்டும்
பழநி நகராட்சி பகுதிகளில் பகல் நேரங்களிலும் தெருவிளக்கு எரிகிறது. உரிய பணியாளர்களை கொண்டு மின்சிக்கன நடவடிக்கையை பின்பற்ற வேண்டும்.- -ராஜலிங்கம், பழநி உடனடி நடவடிக்கை
பகலில் உபயோகமின்றி எரியும் மின் விளக்குகளை சரியான நேரத்தில் செயல்படுத்த ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்.- -உமா மகேஸ்வரி, நகராட்சி தலைவர், பழநி பயன்பாடற்ற சுகாதார வளாகம்
பாடியூரில் கால்நடை மருந்தகம் அருகில் உள்ள பொது சுகாதார வளாகம் பயன்பாடின்றி உள்ளது. இதை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- மணிகண்டன், பாடியூர். நடவடிக்கை எடுக்கப்படும்
திறந்த வெளி கழிப்பிடத்தை பயன்பாட்டை தவிர்க்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி சுகாதார வளாகத்தை பயன்படுத்தும் போக்கை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.- சந்தோஸ்குமாரி, ஊராட்சி தலைவர், பாடியூர். சேதமடைந்த மின்கம்பங்கள்
ஸ்ரீராமபுரம் ஊராட்சி பூத்தாம்பட்டி காலனியில் உள்ள இரண்டு மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளது. விபத்து ஏற்படும் முன் ஊராட்சி,மின்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.- -கருப்புசாமி, பூத்தாம்பட்டி உடனடியாக சீரமைக்கப்படும்
சேதமடைந்தமின்கம்பங்கள் மின் துறை மூலம் உடனடியாக சீரமைக்கப்படும்.- -முருகன், ஊராட்சி தலைவர், ஸ்ரீராமபுரம் ரோட்டில் ஆபத்தான பள்ளம்
கோபால்பட்டி சுகாதார நிலையம் எதிரே நத்தம் நெடுஞ்சாலையில் இருந்து வேம்பார்பட்டி செல்லும் ரோட்டில் ஆபத்தான பெரிய பள்ளம் உள்ளது. விபத்து ஏற்படும் முன் சீரமைக்க வேண்டும்.- -இளங்கோவன், கோபால்பட்டி. நடவடிக்கை எடுக்கப்படும்
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று ரோட்டில் உள்ள பள்ளத்தை சீரமைக்கநடவடிக்கை எடுக்கப்படும்.- -கந்தசாமி, தலைவர், வேம்பார்பட்டி. பொது கழிப்பறை வேண்டும்
ஒட்டன்சத்திரம் நகராட்சி சத்யா நகரில் பொது கழிப்பிட வசதி இல்லாமல் உள்ளது. இதனால் திறந்த வெளியையேமக்கள் கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். பொது கழிப்பிடம் அமைக்க வேண்டும்.--வேலுச்சாமி, ஒட்டன்சத்திரம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
மக்கள் பயன்படுத்தும் வகையில் கழிப்ப்பறை கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.-- திருமலைசாமி, நகராட்சி தலைவர், ஒட்டன்சத்திரம். தெருவிளக்கு வேண்டும்
சின்னாளபட்டி மேட்டுப்பட்டி சேவா சங்க தெருவில் போதிய தெருவிளக்கு வசதி இல்லாததால் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. தெருவிளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- -குமரேசன், சின்னாளபட்டி. நடவடிக்கை எடுக்கப்படும்
பொதுமக்களின் தேவைக்கேற்ப கூடுதல் தெருவிளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.- --செல்வராஜ், பேரூராட்சி செயல் அலுவலர், சின்னாளபட்டி.