உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வரத்து அதிகரிப்பால் விலை குறைந்த முருங்கை

வரத்து அதிகரிப்பால் விலை குறைந்த முருங்கை

ஒட்டன்சத்திரம : ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு உள்ளூர் பகுதிகளில் விளைந்த முருங்கை வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்தது.ஒட்டன்சத்திரம் சாலைப்புதுார், அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், இடையகோட்டை, மார்க்கம்பட்டி, ஜவ்வாதுபட்டி, விருப்பாச்சி, சாலைப்புதுார், கப்பலப்பட்டி, அரசப்பப்பிள்ளைபட்டி, சாமியார்புதுார், பாலப்பன்பட்டி, பொருளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் செடி முருங்கை அதிகமாக பயிரிடப்படுகிறது.சில மாதங்களாக உள்ளூர் முருங்கை வரத்து மிகவும் குறைந்து இருந்ததால் விலை அதிகரித்து கிலோ ரூ.100 க்கும் மேல் விற்பனையானது. பற்றாக்குறையை போக்க நாசிக்கில் விளைந்த முருங்கை இங்கு லாரிகளில் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. நாசிக் முருங்கை கிலோ ரூ. 130 வரை விற்றது. இரண்டு நாட்களாக உள்ளூர் பகுதிகளில் விளைந்த முருங்கைக்காய் அறுவடை செய்யப்படுவதால் மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரிக்க தொடங்கியது. செடி முருங்கை விலை சரிவடைந்து கிலோ ரூ.43 க்கு விற்றது.கமிஷன் கடை உரிமையாளர் மூர்த்தி கூறுகையில்,வரும் நாட்களில் முருங்கை வரத்து இன்னும் அதிகரிக்கும் என்பதால் விலை குறைய வாய்ப்புள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி