உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாநகராட்சி 28வது வார்டில் சாக்கடை துார்வாரும் பணி

மாநகராட்சி 28வது வார்டில் சாக்கடை துார்வாரும் பணி

ஈரோடு : பருவமழை பெய்யும் போதெல்லாம், மாநகராட்சி, 28வது வார்-டுக்கு உட்பட்ட முனிசிபல் காலனி பகுதி கடுமையாக பாதிக்கும். குறிப்பாக சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு, மழை நீருடன் சேர்ந்து கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடும். தென்மேற்கு பருவமழை துவங்க உள்ளதையொட்டி, முனிசிபல் காலனி பகுதியில், மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்-டனர். இந்நிலையில் முனிசிபல் காலனி முதல் பெரிய வலசு வரை இருபுறமும் சாக்கடை கால்வாயை துார்வாரும் பணியில், ௫௦க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் நேற்று ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ