உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / யானை தாக்கி டூவீலரில் வந்தவர் படுகாயம்

யானை தாக்கி டூவீலரில் வந்தவர் படுகாயம்

சத்தியமங்கலம்:தாளவாடி அருகே கொங்கள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகரமூர்த்தி. இவர் நேற்று மாலை மல்லிகார்ஜுனா சுவாமி கோவிலில் தரிசனம் செய்து விட்டு, டூவீலரில் திரும்ப வந்து கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியிலிருந்து வெளியேறிய யானை, இவரை தாக்கியதில் படுகாயமடைந்தார். இவரை மீட்டு, தாளவாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஜீரகள்ளி வனத்துறையினர், தாளவாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி