உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மேம்பாலம் அமைக்க கோரிலட்சுமி நகரில் ஆர்ப்பாட்டம்

மேம்பாலம் அமைக்க கோரிலட்சுமி நகரில் ஆர்ப்பாட்டம்

பவானி,;மேம்பாலம் அமைக்கக்கோரி லட்சுமி நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.பவானி அருகே லட்சுமி நகரில், கோவை-கொச்சி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இங்கு பவானி செல்ல சர்வீஸ் ரோடு பிரிவதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் குமாரபாளையம் பாலத்திலிருந்து, கோணவாய்க்கால் பிரிவு வரை மேம்பாலம் அமைக்க, மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் கோரிக்கையை வலியுறுத்தி, ஒருங்கிணைப்பாளர் விஜயக்குமார் தலைமையில், லட்சுமி நகரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., விடியல் சேகர், மேட்டுநாசுவம்பாளையம் பஞ்., தலைவர் மகேஸ்வரன், லாரி மற்றும் பஸ் உரிமையாளர் சங்கத்தினர், அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர், மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை