உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொடுமுடி காவிரி கரையோரம் ஆர்.டி.ஓ., ஆய்வு

கொடுமுடி காவிரி கரையோரம் ஆர்.டி.ஓ., ஆய்வு

கொடுமுடி: மேட்டூர் அணையில் இருந்து எந்த நேரத்திலும், உபரி நீர் திறக்-கப்படும் நிலை உள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு, அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் எச்சரிக்கை விடுத்து, உஷார் செய்து வருகின்றன. இதன்படி ஈரோடு மாவட்ட நிர்வாகமும், கரையோரத்தில் உள்ள மக்களை எச்சரித்து, பல்வேறு முன்னேற்-பாடுகளை செய்து வருகிறது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்-தரவுப்படி, கொடுமுடி காவிரி ஆற்றங்கரை மற்றும் புகளூரான் வாய்க்கால் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்க-ளுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்-பட்டுள்ளது. இந்நிலையில் கொடுமுடி காவிரி ஆற்றங்கரை, புகளூரான் வாய்க்கால் கரை பகுதிகளில், ஆர்.டி.ஓ., சதீஷ்குமார் நேற்று ஆய்வு செய்தார். காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மக்களை தங்க வைக்கும் மண்டபத்தில் ஆய்வு செய்து அடிப்படை வசதி உள்ளதா என்-பதை பார்வையிட்டார். அவருடன் கொடுமுடி தாசில்தார் பாலமு-ருகாயி, துணை தாசில்தார்கள், ஆர்.ஐ,, கிராம நிர்வாக அலுவ-லர்கள், கொடுமுடி பேரூராட்சி மற்றும் அறநிலையத்துறை அதி-காரிகள் உடன் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை