உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / லஞ்ச ஒழிப்பு சோதனையில் 28 ஆவணங்கள் பறிமுதல்

லஞ்ச ஒழிப்பு சோதனையில் 28 ஆவணங்கள் பறிமுதல்

ஈரோடு:தமிழகத்தில் கடந்த தி.மு.க., ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், பணி நியமனம் மற்றும் டெண்டர்களில் முறைகேடு நடந்ததாக, 30 இடங்களில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தனர். இதன் ஒரு பகுதியாக ஈரோட்டில் பி அண்ட் சி புராஜெக்ட்ஸ் கட்டுமான நிறுவனத்தில், ஈரோடு லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர். இதில், 28 ஆவணங்கள், ஒரு ஹார்டு டிஸ்க் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி