உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கார் கவிழ்ந்ததில் கல்லுாரி மாணவர் பலி

கார் கவிழ்ந்ததில் கல்லுாரி மாணவர் பலி

காங்கேயம், திருப்பூர் மாவட்டம் பல்லடம், மாணிக்காபுரம் கதிர்வேல், 20; திருப்பூர் பெருந்தொழுவு ஹரிஷ், 20; செவந்தம்பாளையம் தீபக், 20; அறிவொளி நகர் கார்த்திகேயன், 20; திருப்பூர் இடுவாய் பாரதிபுரம் கோகுலகிருஷ்ணன், 20; ஐந்து பேரும் சூலுார் அருகே தனியார் கல்லுாரியில் மூன்றாமாண்டு மாணவர். கொடைக்கானல் செல்வதற்காக கூண்டாய் வெர்னா காரில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டனர். திருப்பூர்-தாராபுரம்ரோடு என்.காஞ்சிபுரம் செங்காட்டுதோட்டம் அருகே நள்ளிரவு, 11:00 மணியளவில் சென்றபோது சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் ஐந்து பேரும் பலத்த காயமடைந்தனர். திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மாணவர் கதிர்வேல் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை