உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மக்கள் உரிமை கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்

மக்கள் உரிமை கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்

பவானி:மக்கள் உரிமை கூட்டணி சார்பில், பவானி அடுத்த மாயபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், சேலம் மாவட்ட நீராதாரங்களில் மாசு கலப்பதை கண்டித்தும், மாயபுரம் அன்னை தெரசா நகரில், மின்சாரம், குடிநீர், தார்சாலை, சாக்கடை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொருளாளர் முனுசாமி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ