உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / எம்.பி.என்.எம்.ஜெ., இன்ஜி., கல்லூரியில் ஆன்லைன் தேர்வு

எம்.பி.என்.எம்.ஜெ., இன்ஜி., கல்லூரியில் ஆன்லைன் தேர்வு

ஈரோடு: சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ., இன்ஜினியரிங் கல்லூரியில், ஹெச்.சி.எல்., இன்ஃபோ சிஸ்டம்ஸ் சார்பில், சி.சி.என்.ஏ., என்ற நெட்வோர்க்கிங் சம்பந்தமான ஆன்லைன் தேர்வு நடந்தது.தகுதியான 54 மாணவ, மாணவியர் பங்கேற்று, தேர்வு எழுதினர். தேர்வெழுதிய மாணவர்களை கல்லூரித் தாளாளர் வசந்தா சுத்தானந்தன் வாழ்த்திப் பேசுகையில்,''தற்போது இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவியருக்கு வேலைவாய்ப்பும், அதற்கான பயிற்சியும் சிறந்த பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும்,'' என்றார்.ஹெச்.சி.எல்., ஈரோடு மைய தலைமை அதிகாரி கார்த்திக் விவேகானந்தன் பேசினார்.ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் பழனிசாமி, வேலைவாய்ப்புத் துறை அதிகாரி பார்த்திபன் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை