உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காசிபாளையம் மக்கள் உண்ணாவிரதம்

காசிபாளையம் மக்கள் உண்ணாவிரதம்

கோபிசெட்டிபாளையம்: அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவாக கோபி காசிபாளையத்தில் பொதுமக்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. 'ஊழலுக்கு எதிராக, வலுவான லோக்பால் சட்டம் உருவாக்கப்பட வேண்டும்' என, அன்னா ஹஸாரே போராட்டம் நடத்தி வருகிறார். அவரின் போராட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகியபடி உள்ளது. அன்னா ஹஸாரேவின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, கோபி அருகே காசிபாளையத்தில் பொதுமக்கள் சார்பில், நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். தாராபுரம்: தாராபுரத்தில் ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் அன்னாஹசாரேவுக்கு ஆதரவாக ஒரு நாள் உண்ணாவிரதம் நடந்தது. ஈரோடு - பழனி ரயில் பாதை இயக்கத் தலைவர் லிங்கம் சின்னச்சாமி தலைமை வகித்தார். தொப்பம்பட்டி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சிவசண்முகம் வரவேற்றார். தாராபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி