உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மொபைல் களவாணி கைது

மொபைல் களவாணி கைது

ஈரோடு:ஈரோடு, சூரம்பட்டியை சேர்ந்தவர் பர்கத், 39; ஈரோடு பஸ் ஸ்டாண்டில் பூ கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். கடை டேபிளில் வைத்திருந்த மொபைல்போனை, ஒரு ஆசாமி திருடிக்கொண்டு ஓட்டம் பிடித்தார். அவர் சத்தமிடவே, அக்கம்பக்கத்தினர் ஆசாமியை மடக்கிப்பிடித்து, ஈரோடு டவுன் போலீசில் ஒப்படைத்தனர். கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்த மஞ்சுநாத், 36, என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, மொபைல்போனை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி