உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சாரணர் இயக்க பயிற்சி முகாம்

சாரணர் இயக்க பயிற்சி முகாம்

ஈரோடு:பாரத சாரண, சாரணியர் இயக்க பயிற்சி முகாம் ஈரோட்டில் நேற்று நடந்தது. ஈரோடு, கொடுமுடி, பெருந்துறை கல்வி வட்டாரத்திலுள்ள அரசு, தனியார் பள்ளிகளில் இருந்து 250 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இயக்கத்தின் ஈரோடு மாவட்ட செயலாளர் ராமகண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட பயிற்சி ஆணையாளர் வெங்கடாசலம் தலைமையிலான பயிற்சி ஆசிரியர்கள், ஆசிரியைகள் சாரணர் இயக்க வரலாறு, முதலுதவி, சாரணர் சீருடை, கொடிப்பாடல், சாரண - சாரணிய திறன்கள், இளைஞர் மன்றம் உணவுத் திருவிழா, ஒருமைப்பாட்டு விளையாட்டு, வீரதீர செயல்பாடு, அறிவுசார் செயல்பாடு, இரவு நடைபயணம், சைக்கிள் பயணம் குறித்து பயிற்றுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை