உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சாலை, குடிநீர் வசதி கோரி மகளிர் குழுவினர் முறையீடு

சாலை, குடிநீர் வசதி கோரி மகளிர் குழுவினர் முறையீடு

ஈரோடு: பவானி அருகே செம்படபாளையம், அம்மன்கோவில் தோட்டம் பகுதி மகளிர் குழுவினர், ஈரோடு கலெக்டர் அலுவல-கத்தில் நேற்று மனு வழங்கி கூறியதாவது: எங்கள் பகுதியில், 300 குடும்பத்தினர் வசிக்கிறோம். அனை-வரும் விவசாய வேலை செய்து வருகிறோம். எங்களது ஊரில் இருந்து குறிச்சியில் உள்ள பிரதான சாலைக்கு சென்று வர, 6 கி.மீ., துாரம் பயணிக்க வேண்டும். ஆனால், போக்குவரத்து ஏற்ற சாலை இல்லை. தெரு விளக்குகளும் இல்லை. இதனால் இரவில் அச்சத்துடன் வருகிறோம். எங்கள் பகுதியில் குடிநீர், மின்சார வச-தியும் இல்லை. இதுபற்றி பஞ்சாயத்து தலைவரிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. கலெக்டர் ஆய்வு செய்து, எங்கள் பகு-திக்கு உரிய சாலை, மின்சாரம், குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ