உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விவசாயி வீட்டில் திருட்டு; போலீஸ் விசாரணை

விவசாயி வீட்டில் திருட்டு; போலீஸ் விசாரணை

சங்கராபுரம் : சங்கராபுரத்தில் விவசாயி வீட்டில் திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சங்கராபுரம் அடுத்த புதுபாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சன் மகன் இளையாப்பிள்ளை, 36; விவசாயி. இவர் தனது குடும்பத்துடன் வீட்டின் மாடியில் நேற்று முன் தினம் இரவு துாங்கினார்.நேற்று காலை எழுந்து வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 2 சவரன் நகைகள் மற்றும் 2,000 ரூபாய் திருடு போனது தெரியவந்தது. புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை