உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சிறுமியை கர்ப்பமாக்கியவர் மீது போக்சோ வழக்கு

சிறுமியை கர்ப்பமாக்கியவர் மீது போக்சோ வழக்கு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கியவர் மீது போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்தனர்.ஜி.அரியூரைச் சேர்ந்தவர் அன்பழகன் மகன் விக்னேஷ், 27; இவர் தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து நெருங்கிப் பழகினார். இதில், சிறுமி கர்ப்பமானார். திருமணம் செய்து கொள்ளுமாறு சிறுமி கேட்டதற்கு, விக்னேஷ் மறுத்து திட்டியுள்ளார்.இது குறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் விக்னேஷ் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ