உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பருத்தி மருந்து குடித்தவர் சிகிச்சை பலனின்றி சாவு

பருத்தி மருந்து குடித்தவர் சிகிச்சை பலனின்றி சாவு

கள்ளக்குறிச்சி, : பொற்படாக்குறிச்சியில் பருத்தி மருந்தை குடித்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.கள்ளக்குறிச்சி அடுத்த பொற்படாக்குறிச்சியைச் சேர்ந்தவர் குழந்தைவேலு மகன் செல்வராசு, 55; இவருக்கு குடிபழக்கம் இருப்பதால் வீட்டில் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுவது வழக்கம்.கடந்த 3ம் தேதி குடும்பத்தினரிடம் தகராறு செய்து விட்டு, நிலத்திற்கு சென்ற செல்வராசு அங்கு பருத்தி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடன் அவரை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றவர் நேற்று இறந்தார்.கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி