உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாடியில் இருந்து விழுந்தவர் சாவு

மாடியில் இருந்து விழுந்தவர் சாவு

கள்ளக்குறிச்சி: பெருவங்கூரில் வீட்டின் முதல் மாடியில் இருந்து கீழே விழுந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.கள்ளக்குறிச்சி அடுத்த பெருவங்கூரைச் சேர்ந்தவர் கணேசன் மகன் வேல்முருகன், 32; கடந்த 4ம் தேதி இரவு 8:00 மணியளவில் வீட்டின் முதல் மாடியில் உள்ள கைப்பிடி சுவற்றில் அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார்.இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடன் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை வேல்முருகன் இறந்தார்.புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை