மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
20 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
20 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
23 hour(s) ago
சின்னசேலத்தில் கும்ப கலச பூஜை
02-Oct-2025
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து நேற்று வரையில் 57 பேர் உயிரிழந்தனர். வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார்.தொடர்ந்து, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அங்கு வந்த நாச்சியாள் சுகந்தி என்ற பெண், 'வி.சி., கட்சியில் 4 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். தற்போது சட்டசபை நடக்கிறது.சட்டசபையில் அரசை எதிர்த்து கேள்வி கேட்காமல் இங்கு வந்து மக்களை சந்திப்பதில் என்ன லாபம்' என கேள்வி எழுப்பினார்.அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அந்த பெண்ணை சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, திருமாளவனை எதிர்த்து கேள்வி கேட்ட பெண்ணை, கட்சி நிர்வாகிகள் சூழ்ந்து திட்டித் தீர்த்தனர்.அதற்கு அந்த பெண், 'நான் ஒரு ஜார்னலிஸ்ட். கேள்வி கேட்பேன்' என்றார். பின்னர் அங்கிருந்த போலீசார் அப்பெண்ணை சமாதானம் செய்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
20 hour(s) ago
20 hour(s) ago
23 hour(s) ago
02-Oct-2025