உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சியி்ல் வைகாசி விசாக கருட சேவை

கள்ளக்குறிச்சியி்ல் வைகாசி விசாக கருட சேவை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் வைகாசி விசாக கருட சேவை உற்சவம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை 10:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜ பெருமாள், உபயநாச்சியார் உற்சவர்களுக்கு சிறப்பு அலங்கார திருமஞ்சனம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, கருட வாகனத்தில் வீதியுலா சென்று அருள்பாலித்தார். மண்டகப்படி சேவை, சாற்றுமுறை பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை