| ADDED : மே 20, 2024 06:51 AM
கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சுவாமி வீதியுலா உற்சவம் நடத்தப்பட்டது.கள்ளக்குறிச்சி கடைவீதியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் நுாற்றாண்டை கடந்த பெருமை பெற்றதாகும். இக்கோவிலில் வாசவி ஜெயந்தி விழானை முன்னிட்டு, வாசவி கன்னிகா பரமேஸ்வரி மூலவர், உற்சவர் மற்றும் மகாமேரு தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுடன், லலிதா சகஸ்ரநாம பூஜைகள் நடத்தப்பட்டது. மாலையில் உற்சவர் கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு மீனாட்சி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகளுக்குப்பின் வீதியுலா உற்சவம் இரவு நடந்தது. ஆர்யவைசிய சங்கத்தினர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.