உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  மின்வேலியில் சிக்கி விவசாயி பலி

 மின்வேலியில் சிக்கி விவசாயி பலி

மூங்கில்துறைப்பட்டு: கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அடுத்த கானாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன், 55; அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான நிலத்தை, 30 ஆண்டுகளாக குத்தகைக்கு விவசாயம் செய்து வந்தார். இதில், 5 ஏக்கர் இடத்தில் மக்காச்சோளம் விவசாயம் செய்தார். பயிரை விலங்கு களிடம் இருந்து பாதுகாக்க, விவசாய நிலத்தை சுற்றி மின்வேலி அமைத்தார். நேற்று காலை நிலத்திற்கு சென்றவர் எதிர்பாராத விதமாக மின்வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். வடபொன்பரப்பி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ