மேலும் செய்திகள்
கால்வாய் சாலையோரம் பள்ளம் மண் நிரப்பாததால் விபத்து அபாயம்
12 hour(s) ago
நாய்கள் தொல்லையால் வாகன ஓட்டிகள் அவதி
12 hour(s) ago
வாலாஜாபாதில் அவசர சிகிச்சை பிரிவு: ஜனவரியில் திறக்க முடிவு
12 hour(s) ago
உத்திரமேரூர்:காஞ்சிபுரம்- - செங்கல்பட்டு நெடுஞ்சாலையில், வாலாஜாபாத் அடுத்து சங்கராபுரம் கூட்டுச்சாலை உள்ளது. இப்பகுதியில் இருந்து சங்கராபுரம், லிங்காபுரம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக தேவரியம்பாக்கம் சென்றடையும் இணைப்பு சாலை உள்ளது.சங்கராபுரம் சுற்றுவட்டார கிராம வாசிகள், இச்சாலையை பயன்படுத்தி வாலாஜாபாத், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இச்சாலையில் சங்கராபுரம் அடுத்த லிங்காபுரத்தில் இருந்து, தேவரியம்பாக்கம் வரையிலான 2 கி.மீ., சாலை மிகவும் குறுகியதாகவும், சில இடங்களில் சேதமடைந்தும் உள்ளது.குறுகியதான இச்சாலையில் எதிரே வரும் வாகனங்கள் ஒன்றையொன்று கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர். சில நேரங்களில் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே, குறுகிய சாலையை அகலப்படுத்த, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago