உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வேலாத்தம்மன் கோவிலில் ஆடி திருவிழா விமரிசை

வேலாத்தம்மன் கோவிலில் ஆடி திருவிழா விமரிசை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளின் தங்கையும், அஷ்டகாளிகளில் ஒருவரான திருவீதிபள்ளம் வேலாத்தம்மன் என்கிற பரமேஸ்வரிக்கும், மாவடி அம்மன் நகரில் எழுந்தருளியுள்ள மாவடியம்மனுக்கும் ஆடி திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது.விழாவையொட்டி காலை 10:00 மணிக்கு ஜலம் திரட்டும் நிகழ்வும், மாலை 3:00 மணிக்கு வேலாத்தம்மனுக்கும், 4:30 மணிக்கு மாவடியம்மனுக்கும் பக்தர்கள் ஊரணி பொங்கல் வைத்து படையலிட்டனர்.இரவு 7:00 மணிக்கு மாவடியம்மன் வர்ணிப்பும், இரவு 8:00 மணிக்கு ஜலம் திரட்டும் நிகழ்ச்சியும், இரவு 10:00 மணிக்கு கும்பம் படையலிட்டு அம்மன் வர்ணிப்பும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ