உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / படவேட்டம்மன் கோவிலில் ஆடி திருவிழா விமரிசை

படவேட்டம்மன் கோவிலில் ஆடி திருவிழா விமரிசை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள அய்யப்பா நகரில், தாய் படவேட்டம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 47வது ஆண்டு ஆடி திருவிழா நேற்று நடந்தது.விழாவையொட்டி அதிகாலை 5:00 மணிக்கு அம்மனுக்கு மஹா அபிஷேகமும், தொடர்ந்து காலை 7:00 மணிக்கு அம்மன் கரகம் வீதியுலாவும், 8:00 மணிக்கு கூழ்வார்த்தலும், 9:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன் முக்கிய வீதி வழியாக உலா வந்தார்.மாலை 6:00 மணிக்கு புதிய புயல் மாஸ்டர் கிருஷ்ணா பிரதர்ஸின் கிராமிய கலை நிகழ்ச்சியும், இரவு 7:00 மணிக்கு ஒய்யாளி ஆட்டமும் நடந்தது.இரவு 7:30 மணிக்கு அம்மனுக்கு கும்பம் படையலிட்டு வர்ணிப்பும், மஹா தீபாராதனையும் நடந்தது. விழாவில், கலெக்ட்ரேட், திருப்பருத்திகுன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை