உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 448 பஸ்களில் தானியங்கி கதவு பொருத்தம் படிக்கட்டு பயணத்தை தவிர்க்க நடவடிக்கை

448 பஸ்களில் தானியங்கி கதவு பொருத்தம் படிக்கட்டு பயணத்தை தவிர்க்க நடவடிக்கை

சென்னை : மாநகர பேருந்துகளில் படிக்கட்டு பயணத்தை தவிர்க்க, 448 மாநகர பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளதாக, மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில், 600-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில், 3,200க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில், தினமும் 32 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். காலை, மாலை அலுவலக நேரங்களில், மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்போது, மாணவர்கள் உள்ளிட்டோர் ஆபத்தான முறையில் படிக்கட்டில் நின்றவாறு பயணம் செய்கின்றனர்.இதைத் தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும், போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வருகின்றனர்.படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணம் செய்தால், அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும் என, மாநகர பேருந்து நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.எனினும், பேருந்து படிக்கட்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. எனவே, படிக்கட்டு பயணத்தை முழுமையாக தடுக்கும் வகையில், கதவுகள் இல்லாமல் இயக்கப்படும் பேருந்துகளை அடையாளம் கண்டு, தானியங்கி கதவுகளை பொருத்த, மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்தது.அதன்படி இதுவரை, 448 பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்தப்பட்டுள்ளதாக நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இது குறித்து, மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' தளத்தில் நேற்று வெளியிடப்பட்ட பதிவு: பயணியர் பாதுகாப்பு கருதி, மாநகர போக்குவரத்துக் கழகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாநகர பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டு வருகின்றன.மொத்தம் 448 பேருந்துகளில் கதவுகள் இல்லை என கண்டறியப்பட்டது. இதையடுத்து முதல்கட்டமாக 200 பேருந்துகளிலும், இரண்டாவது கட்டமாக 248 பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டு உள்ளன. பயணியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, நடவடிக்கையை எடுத்து வருகிறோம். இதுபோன்ற மேம்பாட்டு பணிகளுக்கு முன்னுரிமை அளித்து, தொடர்ந்து மேற்கொள்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

duruvasar
ஜூன் 01, 2024 10:34

அய்யா இந்த விளக்கம் ஒரு சப்பைக்கட்டு தான். உண்மையான காரணம் ஓட்டுனரும், நடத்துனரும் சீட் ஒடிந்து பேருந்துக்கு வெளியேல தூக்கி எறியப்படுவதை தவிர்ப்பதற்காக தான் இருக்கும்


jayvee
ஜூன் 01, 2024 08:05

பல முக்கிய வழித்தடங்களில் பேருந்துகளை காணோம்.. அப்படியே ஓடினாலும் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக இரண்டு மூன்று பேருந்துகள் .. பொதுமக்களை மதிக்காக நடத்துனர்கள் ஓட்டுனர்கள் .. அவர்களை விட மோசம்.. டிக்கெட் செக்கர் என்றபெயரில் அடாவடி ரவுடித்தனம் செய்யும் சங்க பெருந்தலைகள் . டீ நகர் டெப்போவில் குறிப்பாக திருவான்மியூர் செல்லும் பேருந்தில் உள்ள ஒரு கண்டக்டர்.. அடாவடி


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ