உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வீட்டின் பூட்டை உடைத்து நகை, லேப்டாப் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை, லேப்டாப் திருட்டு

கூடுவாஞ்சேரி : ஊரப்பாக்கம் ஊராட்சி லட்சுமி அவென்யூவில் வசிப்பவர் கிரிஷ், 34. பெருங்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரின் மனைவி பவித்ரா, 33, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வக்கீலாக உள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் மதுராந்தகத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று, நேற்று காலை 7:00 மணிக்கு திரும்பிய தம்பதி, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டனர்.உள்ளே சென்று பார்த்த போது, அங்கு பீரோ உடைக்கப்பட்டு, மூன்று செட் கம்மல், இரண்டு ஆரம், பிரேஸ்லெட், இரண்டு தங்க நாணயம், இரண்டு வளையல்கள், இரண்டு மோதிரம் என, 10 சவரன் நகையும், இரண்டு லேப்டாப்புகளும் திருடு போயிருந்தன.கூடுவாஞ்சேரி போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை