உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பால தர்மசாஸ்தா கோவிலில் சகஸ்ரநாம பாராயணம் பூர்த்தி

பால தர்மசாஸ்தா கோவிலில் சகஸ்ரநாம பாராயணம் பூர்த்தி

காஞ்சிபுரம் : உலக நன்மைக்காகவும்,அனைத்து உயிர்களும் நோய் நொடியின்றி வாழ்வு பெறவும், குடும்ப ஒற்றுமைவேண்டியும் காஞ்சி புரம் ஆலடி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள பால தர்மசாஸ்தா கோவிலில் தினமும் 1,008 சஹஸ்ர நாம பாராயணம் செய்யப்பட்டு வந்தது. இதில் 48வது நாளான நேற்று சஹஸ்ரநாம பாராயணம் பூர்த்தி விழா நடைபெற்றது.இதில், சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தன. 108 சங்கு மற்றும் கலசங்கள் வைத்து சிறப்பு துாப தீபாராதனையும், உற்சவர் பாலதர்ம சாஸ்தாவிற்கு கலசாபிஷேகம் மற்றும் சங்காபிஷேகம் சிறப்பு மஹா தீபாராதனைநடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்