மேலும் செய்திகள்
ஊராட்சி செயலர் பணிக்கு கீழம்பியில் நாளை நேர்காணல்
21 hour(s) ago
10 ஊராட்சிகளில் நாளை சமூக தணிக்கை கிராம சபை
21 hour(s) ago
சாலையில் சுற்றி திரிந்த 4 மாடுகள் பிடிபட்டன
21 hour(s) ago
ஸ்ரீபெரும்புதுார் : காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த பண்ருட்டியைச் சேர்ந்தவர் அரவிந்தன், 32. ஜே.சி.பி., மற்றும் லாரி வைத்து, சொந்தமாக தொழில் செய்து வருகிறார்.கடந்த 12ம் தேதி இரவு அவரது வீட்டிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜே.சி.பி., வாகனம் காணாமல் போனதாக ஒரகடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன்படி, போலீசார் வழக்கு பதிந்து, 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்து தேடி வந்தனர். பண்ருட்டி அடுத்த வேண்பாக்கத்தைச் சேர்ந்த ஜளபதி, 35, ஜே.சி.பி.,யை திருடி சென்று, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபு என்பவரிடம் விற்பனைக்காக கொடுத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.அதன்படி, பிரபு, 39, மற்றும் ஜளபதியை கைது செய்த போலீசார், இதில் தொடர்புடைய அருண்குமார், 26, கணேஷ்குமார், 34, வேலு, 38, உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். வேலுர் மாவட்டம் பெருமுகை பகுதியில் இருந்து வாகனத்தை மீட்டனர்.
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago