உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / டோல்கேட் மாவடியம்மனுக்கு வரும் 21ல் கூழ்வார்த்தல் விழா

டோல்கேட் மாவடியம்மனுக்கு வரும் 21ல் கூழ்வார்த்தல் விழா

காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம் டோல்கேட், சேதுராயர் தெருவில், மாவடியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாத கூழ்வார்த்தல் விழா, வரும் 21ம் தேதி நடைபெறுகிறது.இதையொட்டி வரும் 19ம் தேதி, காலை 7:00 மணிக்கு பால்குட ஊர்வலமும், மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 8:00 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்வு நடக்கிறது.வரும் 21ம் தேதி, காலை 10:00 மணிக்கு அம்மன் கரகம் வீதியுலாவும், மதியம் 1:00 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்த்தலும்,. இரவு 7:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் எழுந்தருளும் மாவடி அம்மன் முக்கிய வீதி வழியாக உலா வருகிறார்.வரும் 22ம் தேதி, இரவு 9:00 மணிக்கு குண்டையர்தண்டலம், மாரியம்மன் தெரு கூத்து நாடக மன்றத்தினரின் குறவஞ்சி நாடகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை