உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது

சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது

சென்னை:சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.சூளைமேடு பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை காணவில்லை என, அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசில், கடந்த 2ம் தேதி, பெற்றோர் புகார் அளித்தனர்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த திருவெங்கடேஷ், 19, என்பவர், சிறுமியை கடத்தி சென்றது தெரிய வந்தது.அவரை பிடித்து விசாரித்ததில், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று, வில்லிவாக்கத்தில் உள்ள கோவிலில் திருமணம் செய்தது தெரியவந்தது.போலீசார் வழக்குப் பதிவு செய்து திருவெங்கடேஷை கைது செய்து சிறுமியை மீட்டு, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை