உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / களியனுாரில் கூடுதல் குடிநீர் தொட்டி அமைப்பு

களியனுாரில் கூடுதல் குடிநீர் தொட்டி அமைப்பு

களியனுார்:வாலாஜாபாத் ஒன்றியம், களியனுார் ஊராட்சி, பிரதான சாலையில் உள்ள பகுதியினருக்காக, குடிநீர் தட்டுபாடின்றி, கூடுதல் குடிநீர் வழங்க ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.'ஜல்ஜீவன் மிஷன்' திட்டத்தின் கீழ், ஆழ்துளை குழாய் அமைத்து, 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி நடந்து வருகிறது.கட்டுமானப் பணி இரு மாதங்களில் முடிக்கப்பட்டு, இப்பகுதி மக்களுக்கு தடையின்றி கூடுதல் குடிநீர் வழங்கப்படும் என, களியனுார் ஊராட்சி தலைவர் வடிவுக்கரசி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை