உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  சட்டசபை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமனம்

 சட்டசபை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமனம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான, தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமித்து, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்காளர் தீவிர திருத்த பணிகள் நடக்கின்றன. மேலும், ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கான முதற்கட்ட பரிசோதனை அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுதும் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமித்து, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதாவது, ஆலந்துார் சட்டசபை தொகுதிக்கு, சென்னையின் 12வது மண்டல அலுவலரும், ஸ்ரீபெரும்புதுார் சட்டசபை தொகுதிக்கு ஸ்ரீபெரும்புதுார் வருவாய் கோட்டாட்சியரும், உத்திரமேரூர் சட்டசபை தொகுதிக்கு மாவட்ட வழங்கல் அலுவலரும், காஞ்சிபுரம் சட்டசபை தொகுதிக்கு காஞ்சிபுரம் சப் - கலெக்டரும் என, பெயர் குறிப்பிடாமல் பதவி குறிப்பிட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி