மேலும் செய்திகள்
நெடுஞ்சாலையில் வளர்ந்த முட்செடிகளால் அபாயம்
06-Oct-2025
ஸ்ரீபெரும்புதுார்: குன்றத்துார் சாலை நடுவே உள்ள பாதாள சாக்கடை மூடி உடைந்து உள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து, குன்றத்துார் வழியாக, போரூர் செல்லும் சாலையில், தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. பிள்ளைப்பாக்கம், ஸ்ரீபெரும்புதுார் சிப்காடில் இயங்கிவரும் தொழிற் சாலைகளுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளது. ஸ்ரீபெரும்புதுார் பாதாள சாக்கடை திட்டத்திற்காக பட்டுநுால்சத்திரம், கச்சிப்பட்டு பகுதிகளில், இந்த சாலையின் நடுவே பாதாள சாக்கடை குழாய் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், சாலையில் நடுவே அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை மூடி உடைந்து உள்ளது. இதனால், அவ்வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், உடைந்த பாதாள சாக்கடை மூடியால் விபத்தில் சிக்கி விழுந்து காயமடைகின்றனர். எனவே, சேதமடைந்துள்ள பாதாள சாக்கடை மூடியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
06-Oct-2025