உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  பைபர் ஸ்டிக் சாலை தடுப்பு சேதம் போல்ட் நட்டால் வாகனங்கள் பஞ்சர்

 பைபர் ஸ்டிக் சாலை தடுப்பு சேதம் போல்ட் நட்டால் வாகனங்கள் பஞ்சர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காந்தி சாலையில், வாகனம் மோதியதில் சேதமடைந்த உருளை வடிவ 'பைபர் ஸ்டிக்' மைய தடுப்புகளை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரத்தில் வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் மிகுந்த காந்தி சாலையில், அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் சார்பில், மூன்று வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதில், காந்தி சாலையில் இருபுறமும் கடைகளுக்கு செல்லும் வகையில் தனியாக இருவழிப் பாதையும், சாலையின் நடுவே, மூங்கில் மண்டபத்தில் இருந்து தேரடி வழியாக செங்கல்பட்டு நோக்கி செல்லும் வாகனங்களுக்கு தனி வழியும் அமைக்கப்பட்டு மைய தடுப்புக்காக உருளை வடிவ, 'பைபர் ஸ்டிக்' தரையில் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இச்சாலையில் சென்ற வாகனங்கள் மோதியதில், தரையில் பொருத்தப்பட்டுள்ள, 'போல்ட் நட்டில்' இருந்து 'பைபர் ஸ்டிக்' கழன்று மாயமாகிள்ளது. இதனால், தடுப்பு இல்லாத பகுதியில் செல்லும் வாகனங்களின் டயர்கள், 'போல்ட் நட்டுகள்' மூலம் பஞ்சர் ஆகிறது. மேலும் தடுப்பு இல்லாத இடைவெளியில் விதியை மீறி செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது. எனவே, காந்தி சாலையில், மைய தடுப்பில் காலியாக உள்ள இடங்களில் மீண்டும் 'பைபர் ஸ்டிக்' பொருத்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ