உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஆதிதிராவிடர் நலத்துறை விடுதியில் சேர மாணவ - மாணவியருக்கு அழைப்பு

ஆதிதிராவிடர் நலத்துறை விடுதியில் சேர மாணவ - மாணவியருக்கு அழைப்பு

காஞ்சிபுரம்:ஆதிதிராவிடர் நலத்துறை விடுதியில் மாணவ - மாணவியர் சேர விண்ணப்பிக்கலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திகுறிப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும், 19 விடுதிகளுக்கு, 2025 - 26ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.பள்ளி மாணவர்களுக்கு காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஈஞ்சம்பாக்கம், செங்காடு, களியாம்பூண்டி, திருமுடிவாக்கம், திருப்புக்குழி, பெருநகர், ரெட்டமங்கலம் மற்றும் உத்திரமேரூர் ஆகிய 10 இடங்களிலும், பள்ளி மாணவியருக்கு காஞ்சிபுரம், வாலாஜாபாத் என ௨ இடங்களிலும் விடுதிகள் செயல்படுகின்றன.கல்லுாரி மாணவர்களுக்கு 4 விடுதிகளும், மாணவியருக்கு 3 விடுதிகளும் என மொத்தம் 19 விடுதிகள் உள்ளன.இந்த விடுதியில் மாணவ - மாணவியர் சேர, பெற்றோர் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய் இருக்க வேண்டும். தங்கியுள்ள வீட்டிற்கும் விடுதிக்கும் இடையே உள்ள துாரம் 5 கி.மீ.,க்கு மேல் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர விருப்பமுள்ள மாணவ - மாணவியர் nallosai.tn.gov.in இணைய வழியாகவோ அல்லது விடுதி காப்பாளர் உதவியுடன் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை