உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி; ரசாயன கையுறை கழிவுகளால் துர்நாற்றம்

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; ரசாயன கையுறை கழிவுகளால் துர்நாற்றம்

ரசாயன கையுறை கழிவுகளால் துர்நாற்றம்

காஞ்சிபுரத்தில் இருந்து, வையாவூர், கவுரியம்மன்பேட்டை வழியாக, கரூர் கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரம் நீர் வரத்துக் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில், தனியார் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ரசாயன கையுறைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டிவிட்டு செல்கின்றனர்.இரவில் தீவைத்து கொளுத்துகின்றனர். ஒரு சில இடங்களில் கொளுத்தாமல் விட்டு விடுகின்றனர். அங்கு, ரசாயன துர்நாற்றம் வீசுகிறது. இதைத் தடுக்க சம்பந்தப்பட்ட மாசு கட்டுப்பாடு வாரியத்தினர் ஆய்வு செய்ய வேண்டும். - -கே.வி.மாணிக்கம், கரூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ