மேலும் செய்திகள்
அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை
03-Jul-2025
நெல்வேலி:வாலாஜாபாத் ஒன்றியம், நெல்வேலி கிராமத்தில் அமைந்துள்ள சப்தகன்னிகள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.வாலாஜாபாத் ஒன்றியம் நெல்வேலி கிராமத்தில் உள்ள சப்தகன்னிகள் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் யாகசாலை பூஜை துவங்கியது.நேற்று, காலை 9:00 மணிக்கு யாகசாலை பூஜையை தொடர்ந்து, புனிதநீர் கலசம் புறப்பாடு நடந்தது. அதை தொடர்ந்து வேதவிற்பன்னர்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். பின், பாலாபிஷேகம், மஹா தீபாராதனை நடந்தது. விழாவில், நெல்வேலி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.
03-Jul-2025