மேலும் செய்திகள்
கல் குவாரியில் விதிமீறல் கவுன்சிலருக்கு கம்பி
19-Dec-2025
சிறைகளில் போலீசாரை தாக்கிய கைதி மீது வழக்கு
18-Dec-2025
தாயை தாக்கிய தம்பியை கொலை செய்தவர் கைது
11-Dec-2025
கடத்தப்பட்ட குழந்தை 4 மணி நேரத்தில் மீட்பு
08-Dec-2025
நாகர்கோவில்:நாகர்கோவில் அருகே தலைமையாசிரியை அணிந்திருந்த தங்க செயினை அறுத்த தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர். திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வந்த இவர்கள் தங்கம் விலை ஏறியதால் செயின் பறித்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர்.கன்னியாகுமரி மாவட்டம், குழிக்கோடு புதுவிளையைச் சேர்ந்தவர் ஜெரோவின் பிளவன் குயின், 55, வடிவீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை. சில நாட்களுக்கு முன் பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது பைக்கில் வந்த இருவர், இவர் அணிந்திருந்த 5 சவரன் தங்க செயினை பறித்துச் சென்றனர். விசாரித்த கோட்டார் போலீசார், குருந்தன் கோடு கட்டி மாங்கோட்டைச் சேர்ந்த சிவா, 35, அவரது தந்தை சிவசங்கு, 58, ஆகியோரை கைது செய்தனர்.ஆளில்லாத வீடுகளில் திருடி வந்த இவர்கள் மீது 95 வழக்குகள் உள்ளன.
19-Dec-2025
18-Dec-2025
11-Dec-2025
08-Dec-2025