உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆடி பவுர்ணமியையொட்டி அம்மன் கோவில்களில் பூஜை

ஆடி பவுர்ணமியையொட்டி அம்மன் கோவில்களில் பூஜை

கரூர், : ஆடி மாத பவுர்ணமியையொட்டி, க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், உப்புப்பாளையம் வெள்ளதாரையில் வீரமாத்தியம்மன் கோவிலில், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய விரத நாட்களில் வீரமாத்தியம்மனுக்கும், ஏழு கன்னி-மார்களான அபிராமி, மகேஸ்வரி, கவ்மாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்-கிறது.அதன்படி, நேற்று ஆடி பவுர்ணமியையொட்டி பால், பன்னீர், சந்தனம், இளநீர், தேன், கரும்புச்-சாறு போன்ற, 18 வகை மூலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்-காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பா-லித்தார். இதேபோல் குப்பம் காளியம்மன், க.பர-மத்தி அஷ்ட நாகேஸ்வரி அம்மன் சித்தர் பீட கோவில், சூடாமணி மாசாணியம்மன், புன்னம் அங்காளம்மன், அத்திப்பாளையம் பொன்னாட்சி-யம்மன் ஆகிய கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை