உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மேல்நிலை தொட்டி அனுமதி வேண்டி கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு

மேல்நிலை தொட்டி அனுமதி வேண்டி கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு

கரூர்: மேல்நிலை தொட்டி கட்ட அனுமதி வழங்க வேண்டும் என, மகாதானபுரம் பொதுமக்கள் சார்பில், கலெக்டரிடம் மனு அளிக்-கப்பட்டது.அதில், கூறியிருப்பதாவது:கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் மகாதானபுரத்தில், 150 குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் முறையாக தண்ணீர் வர-வில்லை. இங்கு புதிய மேல்நிலை தொட்டி கட்டுமான பணி, சில நபர்கள் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது. தொட்டி கட்டும் இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து, அதனை கட்ட விடாமல் தடுத்து வருகின்றனர். காவிரி ஆற்றங்கரையோரம் இருந்தும், போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை. எங்களுக்கு மேல்நிலை தொட்டி கட்ட அனுமதி வழங்க விட்டால், கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்-சாலை மறியல் போராட்டம் விரைவில் நடத்த இருக்கிறோம்.இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை