உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாயமான முதியவர் உடல் கிணற்றில் இருந்து மீட்பு

மாயமான முதியவர் உடல் கிணற்றில் இருந்து மீட்பு

கரூர்: வெள்ளியணை அருகே, காணாமல் போன முதி-யவரின் உடல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.கரூர் மாவட்டம், வெள்ளியணை தெற்கு மேட்-டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முனியன், 70; இவர் கடந்த, 30ல் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, முனியனின் மகள் காளியம்மாள், 46, போலீசில் புகார் செய்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள தங்கராஜ் என்பவ-ரது விவசாய தோட்ட கிணற்றில், முனியனின் உடல் மீட்கப்பட்டது.முனியன் கிணற்றில், தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என, வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி