உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தட்கல் முறையில் விவசாய மின் இணைப்பு; 31 வரை கால நீட்டிப்பு

தட்கல் முறையில் விவசாய மின் இணைப்பு; 31 வரை கால நீட்டிப்பு

கரூர்: தட்கல் முறையில் விவசாய மின் இணைப்புக்கு டிச.,31 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என, கரூர் மின்வாரிய மேற்-பார்வை பொறியாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதா-வது:கரூர் மின்பகிமான வட்டத்தில், தட்கல் முறையில் விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு பெற விண்ணப்பங்களை சமர்ப்-பிப்பதற்கான கால அவகாசம் டிச., 31 வரை நீட்டிக்கப்பட்டுள்-ளது. இதில், விவசாய மின் இணைப்பு பெற விரும்புவோர் 2025-26ம் ஆண்டுக்கான திட்டத்தின் கீழ், விவசாய மின் இணைப்பு விண்-ணப்பம் பதிவு தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சாதாரண பிரிவில் பதிவு செய்துள்ள விண்ணப்பங்-களை, தட்கல் பிரிவிற்கு மாற்றம் செய்து கொள்ளலாம், பதிவு செய்யாதவர்களும் இணைய வழி மூலமாக புதிதாக பதிவு செய்து, தட்கல் பிரிவிற்கு மாற்றம் செய்துகொள்ளலாம். இதில், 5 எச்.பி.,க்கு- வரை - 2.5 லட்சம் ரூபாய், 7 எச்.பி.,க்கு 2.75 லட்சம் ரூபாய், 10 எச்.பி.,க்கு,- 3 லட்சம் ரூபாய், 15 எம்.பி.,க்கு 4 லட்சம் ரூபாய் தட்கல் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் இது தொடர்பாக, செயற்பொறியாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை