உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கூட்டுறவு துறை சார்பில் பணியாளர் குறைதீர் முகாம்

கூட்டுறவு துறை சார்பில் பணியாளர் குறைதீர் முகாம்

கரூர்: கரூர் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில், பணியாளர் குறை தீர்க்கும் முகாம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.அதில், கரூர் மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும், கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள், தங்களது குறைகளை கடிதம் வாயிலாக, மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜாவிடம் வழங்கினர். குறைகள் தொடர்பான கடிதங்கள், கணினியில் பதிவு செய்யப்பட்டது. முகாமில், துணைப்பதிவாளர்கள் பிச்சை வேலு, அருண்மொழி, வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர் அபி-ராமி, குளித்தலை சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் திருமதி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை