உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆத்துப்பாளையம் அணை நிரம்புவதால் திறக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

ஆத்துப்பாளையம் அணை நிரம்புவதால் திறக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

அரவக்குறிச்சி: க.பரமத்தி அருகே உள்ள, ஆத்துப்பாளையம் அணை நிரம்ப உள்ளதால் அணையை திறக்க விவசாயிகள் எதிர்பார்த்துள்னனர்.கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கார்வழி அருகே உள்ள ஆத்துப்பாளையம் அணை, 18 ஆண்டுகளுக்கு பிறகு, 2019 நவம்பர் மாதம் நிரம்பியது. இதை தொடர்ந்து பாசனத்திற்காக, நொய்யல் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதே போல கடந்த 2020, 2021ம் ஆண்டுகளில், அணைக்கு கூடுதல் தண்ணீர் வந்ததால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த, 20 நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து வருகிறது. 26.90 அடி உயரம் கொண்ட அணையில், நேற்றைய காலை நிலவரப்படி அணை நீர்மட்டம், 25.97 அடியாக உள்ளது.விரைவில் அணை நிரம்பி, உபரி நீர் வெளியேறும் நிலையில் உள்ளதால், விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என, அணையை நம்பி உள்ள விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர். இந்த அணை மூலம் க.பரமத்தி, கரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில், 19,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை